பிரபல கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் தீ விபத்தால் மரணம்!

Thursday, September 29th, 2016

யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த பிரபல கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27) ஏற்பட்ட திடீர் தீ விபத்துக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

அரசியல் வாதிகளின் போலிமுகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலும்,சமகால அரசியல் நிலைமைகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்தும் வகையிலும் நூற்றுக் கணக்கான கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின் சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புக விரும்புவதாகத் தனது இறுதி உரையாடலின் போது தனக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்திருந்தார்.

திடீர் தீ விபத்துக் காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. அஸ்வினின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர அவரது உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர்.

unnamed

Related posts: