நாட்டின் பாதுகாப்பு முறைமை முற்றாக மாற்றியமைக்கப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020

நாட்டின் பாதுகாப்பு துறையை முற்றாக மாற்றியமைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

ஏப்ரல் 21  தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்த பின்னர் அனைத்துறைகளிலும் மாற்றங்களை கொண்டுவர இருக்கின்றோம்.

குறிப்பாக ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சாட்சியங்களுக்கு அமைய நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்குள் பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள், நிதி வழங்கியவர்கள், ஆதரவளித்தவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: