ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே உரையாடல்!
Tuesday, September 1st, 2020அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது Twitter பகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் , பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்வின்றித் தொடர்கிறது எங்கள் துயரம்.....!! கவிதை!!
உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு நான் பொறுப்பல்ல -சட்ட மருத்துவர்!
அர்ஜூன மகேந்திரன், அஜான் இன்றி முறிகள் மோசடி விசாரணையை தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!
|
|