சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம் – பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்ர ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.

இதற்கென விவசாயிகளுக்கு தேவையான சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்..

அத்துடன் சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மூலம் கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஏற்றுமதிப் பயிர் ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் கைதொழில் ஆய்வு பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கை விரைவில் வரையறுக்கப்படவுள்ளதுடன், இதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவும் உள்ளதாகவும் தெரிவித்த பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் இலங்கையின் சிறிய ஏற்றுமதி பயிர்களுக்கு கூடுதலான கிராக்கி நிலவுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: