சீரற்ற வானிலை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
Wednesday, June 9th, 2021நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மரணித்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 132 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் 747 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 905 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆயிரத்து 442 குடும்பங்களைச் சேர்ந்த, 5,ஆயிரத்து 84 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் - தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்ப...
தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் - தபால் திணைக்களம் அறிவிப்பு!
சமுர்த்தி பயனாளிகளை நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்...
|
|