சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !
Saturday, February 15th, 2020இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் மக்கள் கடுமையான சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
எனினும் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட திடீர் விஜயத்தை அடுத்து மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இனி வரும் நாட்களிலும் 3 மணி நேரத்திற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
Related posts:
முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!
ஊரடங்கு சட்ட நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் : அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்...
தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையம...
|
|