நிறுத்தப்படுமா இலங்கைக்கான நிதியுதவி!

Monday, November 19th, 2018

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை தாம் நிதி உதவியை இடைநிறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியமானது பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: