குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!
Thursday, March 4th, 2021குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை மின்சாரம் பெறுவதற்கு வசதியில்லாத குறைந்த வருமானம் பெறும் குடம்பங்களுக்கும் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இந்த மாதம் 6 ஆம் திகதிமுதல் அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மின்சாரம் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு, ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டலஸ் அலகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
விசா வழங்கும் கொழும்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு?
ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் பயணம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
|
|