குடிநீர் தாங்கி அமைந்து தாருங்கள்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கிழக்கு நேதாஜி சனசமூக நிலையத்தினர் கோரிக்கை!

Wednesday, November 9th, 2016

நீண்டகாலமாக தமது பகுதி மக்கள் குடிதண்ணிர் பெற்றுக்கொள்வதில் அதிகளவு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதனால் தமக்கு நீர்த்தாங்கி ஒன்றை பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கிழக்கு நேதாஜி சனசமூக நிலையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேதாஜி சனசமூக நிலைய மண்டபத்தில் விளையாட்டு கழக்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்ட  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே மேற்குறித்த கோரிக்கைகளை சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முன்வைத்துள்ளனர்.

மேலும் தமது பகுதி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களுடன்  சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான உதவிகளையும் பெற்றுத்தருமாறு கோரிக்கைவிடுத்தனர்.

மக்களது நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட இரவீந்திரதாசன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு குறித்த விடயத்தினை கொண்டுசென்று திர்வகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது கட்சியின் நல்லார் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பிரதீபன் மற்றும் தயாழினி ஆகியோர் உடனிருந்தனர்.

20161104_114508

Related posts: