கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தவறிய அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, April 21st, 2021கணக்காய்வு அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகளை நாளையதினம் (22) விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பல சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் கட்சிகளுக்கு அறிவித்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இ.போ.ச பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து!
எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிவரை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் - இலங்கை சிவில் விமா...
3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையா...
|
|