கடுமையான சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் நடைபெற்றது!

Monday, July 13th, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் திகதி 17 திகதிவரை பல கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

அதற்கமைய பிரதேச சுகாதார பணியாளர்கள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்களித்துள்ளனர்.

சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துகொள்ளல் ஆகிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி குறித்த வாக்களிப்பு நடைபெற்றது.

அத்துடன் வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு நிற பேனைகளை எடுத்து வருவது சிறந்தது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளையும் (14) நாளைமறுதினமும் (15) அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தாபால்மூலம் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதேபோல், எதிர்வரும் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் செயலகம், பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்க முடியும்.

மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் ராஜாங்கனை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளயில் தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அநுராதபுரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிஆர்.எம். வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த பகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும் திகதி தேர்தல்கள் திணைக்களத்தால் மீள அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: