எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்து!

Tuesday, May 24th, 2022

எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் பிரதம செயலாளரான அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் டீசல் இருப்பு முந்தைய விலையான ரூ.289க்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஒரு லீற்றர் டீசலின் விலையை 111 ரூபாவினால் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மான மானது தனியார் பஸ் தொழில் துறைக்கு எவ்வகையிலும் சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: