உந்துருளி உரிமையாளர்களுக்கான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!
Tuesday, January 19th, 2021உந்துருளிகள் கொள்ளைச்சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நேற்றையதினத்தில் மாத்திரம் உந்துருளிகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட ஒரு குழுவினால் இந்த கொள்ளைச்சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உந்துருளி பாவனையாளர்கள் உந்துருளிகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுஒள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!
நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
ஐ.நா மனித உரிமை விவகாரம்! முறையாக எதிர்கொள்வோம் - அரசாங்கம் உறுதி!
|
|