இரணைதீவிற்கு மீள் குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விஜயம்!

Tuesday, May 15th, 2018

இரணைதீவிற்கு ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் மீள் குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம் மாதம் 9ம் திகதி நாடாளுமன்றில் ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக விசேட குழுவொன்று இன்றையதினம் இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இக்குழுவின் மீள் குடியேற்ற அமைச்சின் உதவி செயலாளர், மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்,வடபிராந்திய கடற்படை தளபதி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலர் கிருஷ்நேந்திரன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் ஆகியோருடன் பங்குத்தந்தையும் உடனிருந்தனர்.

வருகை தந்த குழுவினரை இரணைதீவு மக்கள் வரவேற்றிருந்ததாக எமது செய்தியாளர்கள் இரணைதீவிலிருந்து எமக்கு தெரிவித்திருந்தனர்.

Related posts: