அடுத்த வாரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகுறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Sunday, November 27th, 2016வரவு செலவுத் திட்டத்தினூடாக விலை குறைப்பிற்கு ஏற்ப 07 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பயறு ஒரு கிலோகிராம் 15 ரூபாவாலும் பருப்பு ஒரு கிலோகிராம் 10 ரூபாவாலும் விலை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, உருளை கிழங்கு, மண்ணெண்ணெய் மற்றும் நெத்தலி ஆகிய பொருட்கள் 5 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், வௌ்ளைச் சீனி ஒரு கிலோகிராம் 2 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரியாயு 25 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது ...
செலவுகளை குறைக்கும் தீவிர முயற்சி!யில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!
ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாம...
|
|