12,000 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை!
Monday, August 15th, 2016தற்போது அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் 12,000 வர்த்தகர்களிடம் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு நகரில் மாத்திரம் 50 மில்லியனுக்கு அதிகமான அபராதப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 4.3 மில்லியன், குருநாகல் மாவட்டத்தில் 3.6 மில்லியன் அபராதப் பணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
மேசன் பயிற்சியாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள்!
19 ஆவது திருத்தத்தை இரத்து : 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
வெளிமாவட்டங்களுக்கு சென்று சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து சேவை!
|
|