வாளுடன் கடைக்குள் புகுந்து அடித்துநொருங்கி அட்டூழியம் – உப்புமடச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்!

Monday, October 22nd, 2018

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழு பலசரக்குக் கடை மற்றும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்து நொருக்கித் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.45 மணியளவில் யாழ்ப்பாணம், உப்புமடச் சந்தியில் நடந்துள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய குழு வாள்களுடன் கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த பொருள்களை அடித்து நொருக்கியது. கடைக்கு முன்பாகத் தரித்து நின்ற முச்சக்கர வண்டியையும் தாக்கிச் சேதப்படுத்தியது. அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் கடைக்குள் வாள்களுடன் புகுந்து தாக்குதல் நடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொலிஸாரால் வீதிச் சோதனை நடவடிக்கைகளும் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

Related posts: