வாகன விபத்து குறித்து கிரிக்கட் சபை இரங்கல்!

Tuesday, September 20th, 2016

நேற்றையதினம் கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகரவின் வாகனத்திற்கு மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் உறவினர்களுக்கு தமது அனுதாபத்தினையும்,துக்கத்தினையும்  தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நுவன் குலசேகர கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வழியிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிர்ப்பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கில் பேருந்தினை முந்தியவாறு முன்னோக்கி செல்ல முயன்றபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போகவே நுவன் குலசேகரவின் வாகனத்தில் மோதியதாகவும் கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிசாரினால் கைது செய்யப்பட நுவன் குலசேகர, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Nuwan-Kulasekera-Press-Release

Related posts:


இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டும் நபரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவ...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை கட்டடப்படுத்துவதில் இராணுவத்தினர் தீவிரம் – இன்றும் நகர்ப்பகுதியில் க...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் - தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களி...