யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
Saturday, October 8th, 2016
யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரொருவரை எதிர்வரும்-18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை(06) உத்தரவிட்டுள்ளார்.
யாழ்- கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்தொன்றின் மூலம் கடத்தப்படுவதாக யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாருக்குத் தகவலொன்று கிடைத்துள்ளது. குறித்த தகவலையடுத்து சந்தேகநபர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைதாகியிருந்தார். இவ்வாறு கைதான சந்தேகநபரை நேற்று யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன் போதே சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வட மாகாணத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
நிதியமைச்சர் உள்ளிட்ட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்று அழைப்பாணை!
யாழ்.குடாநாட்டில் சனியன்றிரவு அதிகூடிய மழை வீழ்ச்சி!
|
|