யாழ்.ஊரெழு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

Wednesday, January 24th, 2018

யாழ் ஊரெழு பகுதியில் இடம் பெற்ற விபத்த ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலாலி வழியாக மிக வேகமாக யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் இருந்த தனியார் பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த ‘ கப் ‘ ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

யாழ்.ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்து உள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். குறித்த விபத்து சம்பவம் பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் இடம்பெற்றுள்ளத.

இச்சம்பத்தில் மோட்டார் வாகன ஓட்டியான 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சம்பவ இடத்திலையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலதிக விசாரணைகளை முன்னைடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: