கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கினார் ஜனாதிபதி
Sunday, September 3rd, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 500 கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கியுள்ளார். வெலிகந்தை குஷிமுல பொருளாதார நிலையத்தில் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி போஷாக்கு பொதிகளை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலில் பௌத்த பிக்குகளுக்கு ஜனாதிபதி அன்னதானம் வழங்கினார். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
Related posts:
இலங்கையின் தென்கிழக்கே பூமியதிர்ச்சி!
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இரத்த பரிசோதனை இல்லை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்ப...
அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிப...
|
|