இலங்கையில் எரிபொருள் கப்பல் !

Tuesday, January 3rd, 2017

எரிபொருள் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக எரிபொருள் கப்பலொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

திடீரென எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் முன்னாயத்தமாகவே இந்த கப்பல் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இதேவேளை வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தினை தடையின்றி வழங்க தேவையான எரிபொருளிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

57550e54cfe14.image

Related posts: