மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாளை விஜயம்!

Thursday, September 12th, 2019

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாளையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாளையதினம்(13) விஜயம் மேற்கொள்ளவுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் சமயத் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சியின் குறித்த மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.

இதன்பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நிகழ்வகளில் பங்குகொள்ளவுள்ள செயலாளர் நாயகம்  கல்லடியிலுள்ள East Lagoon Hotel மண்டபத்தில் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறும் விஷேட அரசியல் கலந்துரையாடல்  நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளதுடன்  மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் செயற்படும் கட்சிகள் மற்றும் பிரமுகர்களுடன் சந்திப்பொன்றையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் குறித்த பயணத்தின்போது செயலாளர் நாயகம் அவர்களை சந்திக்கவுள்ள பிரமுகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சியின் தோழர்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது 077 778 1891 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டோ அல்லது கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின் அவர்களின் 077 389 5359 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு சந்திப்புகளைய மேற்’கொள்ள முடியும்.

Related posts:


வடக்கின் வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...