வடக்கின் போர் மைதானத்திற்கு சென்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இரு பாடசாலை வீரர்களுக்கும் வாழ்த்து!

Saturday, March 7th, 2020

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நேரில் சென்று பார்வையிட்டதுடன் இருபாடசாலை வீரர்களையும் ஊக்குவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் முன்று தினங்களைக் கொண்ட இந்தத் துடுப்பாட்டப் போட்டி கடந்த 5 ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.

விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென். ஜோன்ஸ் கல்லூரியினரும் போட்டியில் மோதுகின்றனர்.

மைதானத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் சிறப்பான வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து...
எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் ...
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு - புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பா...

வடக்கில் கடற்றொழில் மேம்பட்டால்  பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக அமையும் - டக்ளஸ் தேவானந்தா!
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...