யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலோசனை!

Friday, March 4th, 2022

யாழ் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம் இன்று யாழ் மாவட்டத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சரியான முறையில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புக்களும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உற்சாகப்படுத்தினார். – 04.03.2022

Related posts:


கள்ளுக்கு வரி அறவீடு என்பது யாரை ஏமாற்றுவதற்காக யார் மேற்கொள்கின்ற ஏற்பாடு? - டக்ளஸ் எம்பி கேள்வி!
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
இந்தியாவிலிருந்து பொருட்கள் - நாணயமாற்று விடயத்தில் மட்டுமே தாமதம் - தீர்வு கிட்டியதும் காங்கேசன்து...