முழுமைபெறாதுள்ள சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, October 25th, 2020

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத் தொகுதி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள பிரதேச மக்கள் அதனை பாவனைக்கு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் – மக்கள் பெருந்தொகை வரிப்பணத்திலிருந்து வடக்கு மாகாண சபையை ஆட்சி செய்தவர்களால் பெருந்தொகை நிதிச் செலவில் கட்டப்பட்ட குறித்த வைத்தியசாலை இரண்டு மாடிகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டது.

அத்துடன் வடக்கின் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த வைத்தியர் சத்தியலிங்கத்தின் தூண்டுதலின் பேரில் சாவகச்சேரி விபத்து பிரிவு கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பணம் வவுனியா பொது வைத்தியசாலையின் தீடீர் விபத்தும் பிரிவு அமைக்க மாற்றப்பட்டதன் விளைவே குறித்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைந்துள்ள குறித்த கட்டடம் முழுமை பெறாமல் இருப்பதாகவும் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலையில் இடவசதிகள் இல்லாத சூழ்நிலையில் மத்திய அரசினால் வரைந்து அனுப்பப்பட்ட கட்டட வரைபடத்தை மாற்றி திடீர் வைத்திய பிரிவை நிறுவுவதற்காக தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியாவில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டதாகவும் மக்கள் குற்றச்ஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கென மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட குறித்த  கட்டடம் கம்பீரமாக காட்சி அளித்தாலும் இரவில் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சரணாலயமாக மாறி வருவதோடு குறித்த கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள யன்னல் கதவுகள் கழன்று விழும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது

அந்தவகையில் குறித்த வைத்தியசாலையில் தேவைகருதி அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை பூரணப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பிரதேசத்தின் சுகாதார மேம்பாட்டை சீர்தூக்கி நிறுத்து உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூச...
இவ்வருட இறுதிக்குள் வளமான வாழ்வாதாரத்தை உருவாக்கித்தர நடவடிக்கை - தேவன்பிட்டி மக்களிடம் அமைச்சர் டக்...