திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Wednesday, March 1st, 2017மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வரலாற்றுச் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரர் சுவாமிகள் வீதி உலா செல்லும் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அர்ச்சனைத் தட்டு வழங்கி சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
திருகோணமலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சுவாமி வீதியுலா நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆச்சாரியார்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வருடாவருடம் திருக்கோணேர்வரர் சுவாமிகள் திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய வீதிகளூடாக சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் "நல்லூர் இராசதானி" தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...
|
|