சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் – அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!

Saturday, December 26th, 2020

சுகாதார வசதிக் குறைபாடுடைய கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் குறித்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்களின்சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கோடு கடற்றொழில் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது பயனாளிகளுக்கு முதற் கட்டமாக குறி்த்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முற்பணமாக ஆயரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மிகுதித் தொகை விரைவில் வழங்கி வைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 26.12.2020

Related posts: