வெளிநாட்டவர்கள் உயிரிழப்பது இலங்கையில் அதிகம் – நாடாளுமன்றில் தகவல்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கு உயிரிழப்பது கடந்த மூன்று வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டில் 49 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இறந்துள்ளனர்.மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு 81 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் 87 வெளிநாட்டவர்கள் இலங்கை உயிரிழந்துள்ளதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கை உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ஜனாதிபதி!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட புவியியல் மாற்றம் - ஆபத்தின் அறிகுறியா?
உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
|
|