மகாஜனக் கல்லூரி மாணவி மரணம்: சோகத்தில் தெல்லிப்பளை!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் நோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழ். மகாஜனக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி சிவநேசன் பிரியங்கா உன்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
கருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட சிவநேசன் பிரியங்கா நீண்டகாலமாக மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மகாஜன பெண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் மூத்த வீராங்கனையான சிவநேசன் பிரியங்கா பல சாதனைகளை புரிந்துள்ளார்.
குறித்த மாணவியின் இழப்பு குறித்த பாடசாலையை மட்டுமல்லாது யாழ்மாவட்ட விளையாட்டுத்துறையினரையும் பெரும் சோகத்திலாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ்: 3500 பேருடன் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்!
நாடு எந்த வித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை - பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!
சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!
|
|