பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு!

பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பாவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்வி அமைச்சில் திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்பதுடன் அதேவேளை ஆசியர்கள் பாடசாலைகளில்தொலைபேசி பயன்படுத்துகிறார்கள். இதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
ஆனால் தொலைபேசி என்பது அனைவருக்கும் தேவையான பொருளாக மாறிவருகின்றது. ஆகவே தேவை ஏற்படின் ஆசிரியர்கள் அவர்களது ஓய்வு அறையில்பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
3 நாடுகளுக்கு வீசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடு!
வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக...
|
|