தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் டிசம்பர் மாதம் 11 முதல் 20ஆம் திகதிக்கு இடையில் – தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் முதல் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று முற்பகல் கைச்சாத்திட்டார்.
Related posts:
காலியில் புதிய சுற்றுலா வலயம் ஸ்தாபிப்பு!
இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை- ம.உ.ஆணைக்குழு விசாரணை முன்னெடுப்பு!
நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் - இராஜாங்...
|
|