சாதாரணதரப் பரீட்சையில் நாளாந்தம் முறைகேடுகள்! பரீட்சைகள் திணைக்களம் !

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் நாளாந்தம் 3 அல்லது 4 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகள் குறித்துப் பரிசீலிப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித கூறியுள்ளார்.
பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அடையாளங்காணப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சையில் தோற்றிய மாணவர் மற்றும் அவருக்கு உதவிய ஆசிரியர் மீது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இவை குறித்து விசாரணை செய்வதற்கு ஒழுக்காற்றுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவருக்கு உதவிய ஆசிரியரை வரவழைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
|
|