உலகில் உணவு பற்றாக் குறை அதிகரிக்க வாய்பு: அதிர்ச்சி தகவல் வெளியானது!

Tuesday, April 3rd, 2018

பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள எக்செட்டர் என்ற பல்கலைக் கழகம் பருவ நிலை மாற்றத்தால் உலக அளவிலான உணவுப் பாதுகாப்பில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 122 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வில் பருவநிலை மாற்றத்தால் மழை சரிவர பொழியாது எனவும், இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிய்வந்துள்ளது.

அதுமட்டுமின்றி உலகின் வெப்பத்தின் அளவி 2 டிகிரி செல்சியல் அளவு அதிகரித்தால் 76 சதவீதம் வளர்ந்து வரும் நாடுகளில் உணவுப்பற்றாக்குறையை இது ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்துள்ளது.

Related posts: