அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூடுதலான முன்னேற்றம்!

நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் விடயத்தில் கூடுதலான முன்னேற்றம் இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிதியுதவியின் பெறுமதி 1640 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். இவற்றில் சுமார் 1500 மில்லியன் டொலர்கள் கடன் உதவியாகும். எஞ்சிய தொகை உதவியாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.
பாதை மற்றும் பாலங்களை நிர்மாணிப்பதற்காகவே கூடுதலான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள், நீர்வழங்கல் செயற்திட்டம், மின்சாரம் போன்ற துறைகளுக்காக கூடுதலான நிதி செலவிடப்பட்டிருப்பதாக நிதியமைச்சின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை - கனடாவுக்கு இடையே இரு தரப்பு பேச்சுவார்தை!
யாழ். பல்கலையில் உடற்கல்வித்துறை பட்டப்படிப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் நா...
தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு - சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!
|
|