10,000 விசாவினை அறிவித்தது கனடா!

இளம் வயது ஐரிஷ் மக்களுக்கு 10,000 பணிக்கால விசாவினை வழங்கவிருப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
2018 – ல் குடியேற்ற அனுமதி 310,000 ஆகவும், 2020 – ல் 340,000 ஆக குடியேற்ற அனுமதி அதிகரிக்கவிருப்பதாக கனேடிய குடிவரவு சேவை அறிவித்துள்ளன
தற்போது, ஐரிஷ் மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசா, 18 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் இளம் தொழில்முறை மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்ற விரும்புவர்களுக்கும் விசா வழங்கப்படுகிறது.கனடாவில் இரு ஆண்டுகள் வரை வாழவும் மற்றும் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சர்வதேச கூட்டுறவு கூட்டு விசாக்கள்(International Co-Op visas) ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஐரிஷ் இளைஞர்கள் கனடாவிற்கு குடிபெயர்வதால், அவர்களுக்காக இந்த பணிக்கால விசாவினை அறிவித்துள்ளோம் என கனடா தெரிவித்துள்ளது.கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வயது பிரச்சனை, இறப்பு விகிதங்கள், பொருளாதார பிரச்சனை மற்றும் தொழிலாளர்கள் தேவை ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த குடியேற்ற திட்டம் விரிவுபடுத்தப்படும்.
Related posts:
|
|