வெள்ளம் – இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக இதுவரையில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கேரள மாநிலத்தில் மாத்திரம் 57 பேர் வரை உயரிழந்துள்ளதோடு, 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சின் விமான நிலையம் இன்று பிற்பகல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்க வெளியேற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கும் நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேரளாவை போன்றே கர்நாடகா, மாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை பயிற்சி அளித்தவர் ஆஸ்திரேலியாவில் கைது!
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
சீனி அதிகமாக உள்ள பானங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
|
|