மியன்மார் கடற்பரப்பில் விமானம் விபத்து!

அடையாளம் தெரியாத விமானம் ஒன்று மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்தநாட்டு விமானப் போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம் பற்றியும், விபத்து இடம்பெற்ற இடத்தை அடையாளம் காண்பதற்காகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடக செய்திகள் கூறுகின்றன. எவ்வாறாயினும் அது தமது நாட்டு விமானம் அல்ல என்பது ஆரம்ப பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Related posts:
பாகிஸ்தான் இராணுவத்தை வெல்லமுடியாது - ரஹீல் செரீப்!
பிரான்சில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தவர் சுட்டுக்கொலை!
ஆஸி வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா?!
|
|