பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி!

குஜராத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் உட்பட 80 பேர் சுற்றுலாவிற்காக சென்ற பேருந்து மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்றபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் படுகாயம் அடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால் கணவருக்கு ஆதரவு இல்லை - நைஜீரியா அதிபரின் மனைவி!
சீன - வட கொரிய அதிபர்கள் சந்திப்பு!
ரஷ்யாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று!
|
|