பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துள்ளோரை வெளியேற்றச் சட்ட மூலம் !

பிரித்தானியாவவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 25 முதல் 28 வேலை நாட்களுக்குள் அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அகதிகளது விண்ணப்பங்களை விசாரணை செய்யும் நீதிபதிக்கு அந்த விண்ணப்பதாரியை அனுமதிப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
அகதி அந்தஸ்த்து கோருவோரில் பிரித்தானியாவில் தங்கி இருக்கத் தகுதியற்றவர்களை உடனடியாக வெளியேற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன் ஊடாக அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட வேண்டிய காலமும் குறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது 100 நாட்களுக்கு மேலும் அகதிகள் தடுத்து வைக்கப்படுகின்ற நிலமை காணப்படுகிறது. இந்தச் சட்டம் ஈழ அகதிகள் மீதும் அதிக தாக்கம் செலுத்தவுள்ளது என்று கூறப்படுகிறது,
Related posts:
|
|