பிரஸ்ஸல்சின் தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர்?

அண்மையில் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் எனதெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நஜீமை பாராளுமன்றத்தில் பணிக்கமர்த்திய தொழில் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் எவ்வித குற்றப் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கவில்லை என உறுதி செய்திருந்தது. பாராளுமன்றத்தில் கோடை காலப் பணிகளில் ஈடுபட்ட நஜீம் தன்னை ஒரு மாணவனாக தெரிவித்திருந்தார்.
பிரஸல்ஸில் ஸவென்டம் விமான நிலையத்தில் தன்னை வெடிக்க வைத்த நஜீம் (Najim Laachraoui) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிசில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் ஒருவர் என்பதும் குறிப்பிடப்பட்டது.
Related posts:
|
|