பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்த நிலையில் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தபோது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிரியாவின் இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள்: 100க்கும் அதிகமானோர் பலி!
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!
ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!
|
|