ட்ரக் வாகனத்தில் சென்ற 28 பேர் பலி..! குஜராத்தில் பரிதாபம்!

இந்தியாவில் ட்ரக் வாகனமொன்று கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். இந்தியா – குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்திலிருந்து 60 பேர் டிரக் வாகனமொன்றில் திருமணத்துக்குச் சென்றுள்ளனர். உம்ராலா என்னும் இடத்தில் பாவ்நகர் – ராஜ்கோட் வீதியில் பாலம்மீது ட்ரக் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கவிழ்ந்து கால்வாயில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
நியுயோர்க் தீவிபத்திற்கு காரணம் சிறுவனின் விளையாட்டே!
போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – சூடானில் 30 பேர் உயிரிழப்பு!
இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா - இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!
|
|