சூடானில் கடும் மழைகாரணமாக 76 பேர் பலி!

சூடானில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துவிட்டதாகவும் சில பகுதிகளில் ஒட்டுமொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடானில் உள்ள 18 மாகாணங்களில் 13 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நைல் நதி, இந்த நூற்றாண்டிலேயே அதிகபட்ச உயர்மட்டத்தில் இருப்பதாக நீர் மற்றும் பாசன அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால் இன்னும் அதிக மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது சூடான் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
துப்பாக்கிச்சூடு நடத்துவதை தடுக்கவேண்டும்- சுஷ்மாவிடம் கோரிக்கை!
பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை - அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவிப்பு!
2024 பாரிஸ் ஒலிம்பிக் - ரஷ்யர்கள் பங்குபற்ற ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை ஆதரவு!
|
|