எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி!

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய நாடு ஸ்லோவாக்கியா. இந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ப்ரெசொவ் நகரில் உள்ள 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து முதல் 5 தளங்களில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 5 நபர்களின் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். 40 பேர் இந்த விபத்தினால் காயமடைந்துள்ளனர்.
மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Related posts:
கார் மீது வாகனம் மோதியதில் தகராறு: அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை !
சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும...
படகு கவிழ்ந்து விபத்து - 100 பேர் வரை பலி!
|
|