இலங்கைக்கு வருகை தந்த நைஜர் ஜனாதிபதி!

நைஜர் ஜனாதிபதி மொஹமட் இசோபு சுமார் இரண்டு மணி நேரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்து மீண்டும் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் நைஜர் ஜனாதிபதியும் பயணித்த வேளையில் நேற்று அதிகாலை 3.20 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதோடு அதன் பின்னர் 5.40 அளவில் குறித்த அந்த விமானம் இந்தோனேஷியாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
நைஜர் நாட்டு ஜனாதிபதியுடன் அந்நாட்டு தூதுக் குழுவினர் 7 பேரும் விமானம் ஆயத்தமாகும் தருணத்தில் கட்டுநாயக்கவிலுள்ள ஓய்வறையில் தங்கியிருந்துள்ள நிலையில் அறிவித்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அவர்கள் குறித்த விமானத்தில் இந்தோனேஷியாவுக்கு பயணத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
வரலாற்றை புரட்டி பார்த்துவிட்டு மோதுவது பற்றி யோசியுங்கள்- வியட்நாமிற்கு சீனா எச்சரிக்கை!
சிரிய உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 107 பேர் பலி : 100,000 பேர் பாதிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
|
|