இரண்டு விமானங்கள் மோதி விபத்து!

கனடாவின் டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது.
எவ்வாறாயினும் , விமானத்தில் பயணிக்கவிருந்த 168 பயணிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 6 பேர் பாதிப்புக்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
போயிங் 737 -800 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானம் மோதிய ஜெட் விமானத்தில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவாகும் இரண்டாவது விபத்து இதுவாகும்.கடந்த ஓகஸ்ட் மாதம் கனடா மற்றும் போலாந்து ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்த நிலையில் , எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மெக்சிகோ ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்து!
1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பலி!
சிறுவர்களுக்கு தடுப்பூசி 100 விகித செயற்திறனை வழங்கும் - பைசர் நிறுவனம் அறிவிப்பு!
|
|