இரட்டைக்கோபுர தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு!

2001 செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது.
இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல் வழங்கியது.
அதிபர் ஒபாமா இந்த மசோதாவை தான் நிராகரிக்கவுள்ளதை வலியுறுத்தியுள்ளார்.இரட்டை கோபுரத் தாக்குதல்களில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியப் பிரஜைகள்.
Related posts:
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் பல மில்லியன்கள் இழப்பு!
எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது - ஜோ பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
|
|