இரசாயனத் தாக்குதல்: சிரியாவில் பலர் பலி !

சிரியாவின் கிழக்கு குவோட்டாவில் உள்ள டொவுமா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன வாயு தாக்குதல் காரணமாக 70க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் கட்டடங்களில் இருந்து பல உடலங்களை மீட்கும் காட்சிகள் இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் தாம் இந்த இரசாயன ஆயுத தாக்குதலை மேற்கொள்ளவில்லை என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் சிரிய அரச துருப்பினருடன் இணைந்து செயல்படும் ரஷ்ய படைத்தரப்பினர் இதற்கு முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரித்வி -2 ஏவுகணை: இந்தியா வெற்றிகரமான சோதனை!
நிலக்கரி சுரங்க வெடிவிபத்து - 5 பேர் பலி!
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 வீரர்களைத் திரும்பப் பெறவுள்ள அமெரிக்கா!
|
|