இந்தோனேசியாவின் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து!

Monday, March 29th, 2021

இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தினால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஜாவா பகுதியிலேயே இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
இந்த தீ விபத்து பல மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் இந்த வெடிப்பு அண்டை குடியிருப்பு பகுதிகளில் பொருள் சேதத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நேரில் கண்ட சாட்சிகள் மின்னல் மற்றும் இடியின் பின்னர் இது நிகழ்ந்ததாக கூறியுள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: